வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில்சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில்கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் குரலில்கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல்ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக 13.7.2012 தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார்.
காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாடல்கள் மத்தியில் இப்பொழுது புதிய பாடலாக இப்பாடல் கிராமிய மண் வாசனை கமழும் பாடலாக வெளிவந்துள்ளது . .இது முற்றிலும் வன்னி மண்ணின் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய மற்றுமொரு படைப்பாக வெளிவந்துள்ளது.
இப்பாடலை எழுதியிருப்பவர் சாந்தரூபன்(அவுஸ்டேர்லியா) இப்பாடலை கந்தப்புஜெயரூபனோடு இணைந்து சசிகுமார் பாடியுள்ளார்.பாடலை கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்துள்ளார்.இப்பாடலுக்கான ஒளி பதிவு மற்றும் படத்தொகுப்பினை பிரியந்தன் அமைத்துள்ளார்.இப்பாடலுக்கு நடித்துள்ளார்கள் துஜான்,கிறிஸ்டிவேயினி ,கிறிஸ்டி,மாணிக்கம் ஜெகன்,சுஜிவினி,பிரதீப் மற்றும் வவுனியா அரங்காலயா கலைஞர்கள்..ஈழத்தின் முன்னணி இசை குழுக்களில் ஒன்றான வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள். இப்பாடல் ஒரு கிராமிய காதலை வெளிபடுத்தும் நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.....பிரியந்தனின் கணனி வரைகலையில் மிகவும் அற்புதமான பாடலாக மிகவும் வித்தியாசமாக வெளிவந்துள்ளது...
கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவேபாடல்
இசை -கந்தப்புஜெயந்தன் பாடல் வரிகள் -சாந்தரூபன் பாடலை பாடியவர்கள் -கந்தப்பு ஜெயரூபன் ,சசிக்குமார் பாடல் தயாரிப்பு ஒளிபதிவு ,எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) பாடல் வெளியீடு -வவுனியா ராகஸ்வரம் இசைகுழு கலைஞர்கள்
0 comments:
Post a Comment