Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Wednesday, April 25, 2012

எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்​ள வீடியோ வடிவம்..


இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும்



பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன்
பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின்
தயாரிப்பு -கோபி
எடிட்டிங் -திபோ
வர்ணம் -லவன்
ஒளிபதிவு -பிரஷாந்தன்
நடிப்பு -குகன் ,திவ்யா

Sunday, April 22, 2012

அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்ய Free Software


அனைத்து விதமான Video,Audio,Picture களை Convert செய்து உங்களுக்கு விரும்பிய Format களில் பெற்றுக்கொள்ள இலவசமான மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Format Foctory எனும் மென்பொருள் மூலம் நீங்கள் பல்வேறுபட்ட Video format களையும் Audio Format களையும் , Picture Format களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Video formats
All to Mobile Device , All to Mp4 , All to AVI , All to 3GP , All to RMVB , All to GIF , All to WMV ,
All to MKV , All to MPG , All to VOB , All to MOV , All to FLV , All to SWF

Audio Formats
All to MP3 , All to WMV , All to FLAC , All to AAC , All to MMF , All to AMR , All to M4A ,
All to M4R , All to OGG , All to MP2 , All to WAV , All to WavPack

Picture Formats
All to JPG , All to PNG , All to ICO , All to BMP , All to GIF , All to TIF , All to PCX , All to TGA

ROM Device
DVD to Video File , Music CD to Audio File , DVD/Cd to ISO/CSO , ISO<-->CSO


Advanced
Video Joiner , Audio Joiner , Mux , Medio File Info

Format Foctory மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...


Sunday, April 15, 2012

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட" The Game " எனும் குறும்படத்தை பார்வையிட...


யாழ்ப்பாணத்தில் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் The Game எனும் குறும்படத்தை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Cast : A.Umakaran | N.Lavanjan
Music Director : Jesus Yuvaraaj
Director : R.Nishanthan
Camera & editing : R.Nishanthan

Media Partners : LONDAN.FM | JHCBOYS.COM
Facebook Support : www.facebook.com/myjaffna

Contact for @ 0750394258 | Nishanthan ( director ) 0750429028 | Umakaran ( actor ) 0779251911 | Jesus Yuvaraaj ( music director )

THE GAME shortfilm trailer






THE GAME Tamil Shortfilm

Saturday, April 14, 2012

வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஏதோ ஒரு மயக்கம் எனும் காதல்ப்பாடல்!! (வீடியோ இணைப்பு)


ஏதோ ஒரு மயக்கம் பாடலை ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர்.பாமினியின் வரிகளில்மு.ராஜேஸ் இன் இசையில் பத்மலதா பாடியுள்ளார். இப் பாடலுக்கு நடிகர்கள் மேவின் மைக்கல் திவ்யா மற்றும் சதீஸ் நடித்துள்ளனர் .இதற்க்கு காட்சி அமைப்பு மற்றும் கணனி வரைகலையை தி. பிரியந்தன் அவர்கள் வடிவமைத்துள்ளார் .

அண்மையில் ஜெந்தனின் இசையில் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில் வெளிவந்த கண்ணோடு கண்கள் பேசுதே என்ற பாடல் இணையத் தளம் ஊடக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இப் பாடல் மூலம் இவருக்கு தென் இந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி

பாடியவர்-பத்மலதா

இசை-மு.ராஜேஸ்

நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ்

கணனி வரைகலை- தி. பிரியந்தன்

ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்


Friday, April 13, 2012

கரணவாய் மூத்தவிநாயகர் ஆலத்தில் உள்ள அரசமரத்தில் விநாயகர் உருவம்....(புகைப்படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பிரதேசத்தில் உள்ள மூத்தவிநாயகர் ஆலயத்தில் உள்ள அரசமரத்தில் அதிசயமாக விநாயகர் உருவம் ஒன்று தோன்றியுள்ளது. இவ்விநாயகர் உருவத்தை மக்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.....






Sunday, April 8, 2012

இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் .


இராவண்ணன்

இந்த பதிவை சற்று பொறுமையுடன் படிக்கவும் நண்பர்களே சில முக்கிய தகவல் உள்ளது . நம் தமிழன் இராவணன் பற்றி தெரிந்து கொள்வோம் .

தமிழர்களையெல்லாம் அரக்கர்களாக மாற்றி கதை எழுதியிருக்கின்றார்கள். அதுவும் தலைசிறந்தவர்களை கூட இப்படி மாற்றியவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லை எனும் போது தான் வேதனையாக இருக்கிறது. படியுங்கள் நண்பர்களே மேலும் .........

இரா – இரவு.

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள். பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணரமுடியவில்லை.

இராவணன் தமிழன் -

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம். ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம் –

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் -

ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது. கம்பனின் சொல்வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தி.க வினரும் இதை கவணத்தில் கொள்வதில்லை.

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.

எனக் குறிப்படப்பட்டுள்ளது.

பத்து தலைக் காதல் -

எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிம் வல்லவனான ராவணனின் பெருமைஉணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.

தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான். காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.

சீதையை கவர்ந்த காரணம்

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.

தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.

ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன் -

பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…

சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.

ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான். பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டுபோய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான்.

இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை!
 — 

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம். Daily Motion மற்றும் Yahoo வில் அருவருக்கத் தக்கவற்றை பார்த்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் பேஸ்புக்.


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion


Yahoo

மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் காட்டும். இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.

அதாவது நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும். 


மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.





Thursday, April 5, 2012

Internet Download Manager மென்பொருளை full version ஆக பயன்படுத்துவதற்கு...


அனைவராலும் தற்போது பயன்படுத்தப்படும் மென்பொருளாக Internet Download Manager விளங்குகிறது. ஆனால் இவ் மென்பொருளை நாம் தரவிறக்கி பயன்படுத்தும் போது 30 நாட்கள் மட்டுமே செயற்படுகின்றது. இதனை நாம் தொடர்ந்து full version ஆக பயன்படுத்த கீழே உள்ள நீட்சியை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
நீட்சி-  Internet Download Manager

பின்னர் Internet Download Manager இன் Registration  பகுதியை தெரிவுசெய்யுங்கள் . Registration  பகுதியை தெரிவு செய்ய முதலில் Program files - Internet download manager - ID man - Registration

Program Files

Internet Download Manager

ID Man



பின்னர் கீழே உள்ள நீட்சியை தரவிறக்குங்கள்.
நீட்சிInternet Download Manager Crack File

தரவிறக்கிய File ஜ Click செய்தவுடன் கீழே உள்ளவாறு window தோன்றும்..


பின்னர் Internet Download Manager Registration பகுதியில் Full Name , Last Name ,email address என்பவற்றை குடுத்து பின்னர் Serial Number என்னும் இடத்தில் மேலே காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு Serial Number ஜ copy past செய்யவும்..
குறிப்பிட்ட Serial Number பொருந்தாவிடின் Generate எனும் பகுதியை click செய்து புதிய Serial Number ஜ பெற்று மீண்டும் முயற்சிக்கவும்.

மேலதிக தொடர்புகளுக்கு- 0772380234

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons